(உண்மைகளைத் தோலுரிக்கும் அரசியல் தொடர்)
-ஞானி
தமிழரசுக் கட்சிக்குள் எந்த நோக்கத்துக்காக சுமந்திரன் நுழைந்தாரோ அதைக் கனகச்சிதமாகச் செய்துமுடித்துவிட்டார். தன் அரசியல் வாழ்வு போனாலும் பரவாயில்லை,ஆனால் தமிழரசுக் கட்சியையும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையையும் அழித்தேயாகவேண்டும் என்பதே சுமந்திரனின் கனவு. புலிகளைச் சுத்தமாகப் பிடிக்காத சுமந்திரன், 2009 க்குப்பின்னர்தான் அரசியலுக்குள் நுழைந்தார். அமைதிப்படை பட அமாவாசை சத்தியராஜ் எப்படி மணிவண்ணனுக்கு எடுபிடியாகச் சேர்ந்து, பின்னர் எம்.எல்.ஏவாக மாறினாரோ அதேபோல் கட்சியின் வழக்குகளை தானே வலிய வந்து வாதாடி, சம்பந்தர் ஐயாவின் இதயத்தில் இடம் பிடித்து, கட்சியிலும் இடம் பிடித்து, இப்போது மடத்தையும் பிடித்து, கடைசியாக வீட்டையே நீதிமன்றத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்.
இதில் சுமந்திரனின் இந்தச் சூழ்ச்சிக்கு அவரோடு கூட இருப்பவர்கள் தான் உடந்தை. எப்போதுமே சுமந்திரன் தனக்கு எதிரானவர்களை வீழ்த்த நேரடியாகத் தானே செல்வதில்லை. மறைமுகமாக ஒளிந்திருந்து, முதுகில் குத்துவதுதான் அவருக்குத் தெரிந்த ஒரேயொரு வித்தை. சுமந்திரன் கட்சிக்குள் கால்வைத்த சில நாள்களிலேயே கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி ஆகிய மூவரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டனர். இந்த ,மூவரும் புலிகளால் கட்சியில் இணைக்கப்பட்டவர்கள். அவர்களைக் கட்சிக்குள் வைத்திருப்பது புலிகளை வைத்திருப்பதற்குச் சமம் என்று சுமந்திரன் தூபம் போட, அதற்கு சம்பந்தரும் தலையசைக்க புலிகளின் கொள்கைவழி நின்ற மூவரும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் தேசியப்பட்டியல் மூலம் கட்சி எம்.பி.யான சுமந்திரன் கட்சியின் முக்கிய தூண்களாக இருந்தவர்களை, மெல்லமெல்ல அப்புறப்படுத்தத் தொடங்கினார். அத்துடன் அரசாங்கத்தோடும் நல்லுறவை பேணிக்கொண்டார். தமிழரசுக் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ஆசை சுமந்திரனுக்கு இன்று, நேற்று வந்ததல்ல. அதற்கான காய்நகர்த்தல்களில் அவர் மிகநீண்டகாலமாகவே இறங்கியிருந்தார். தனக்குப் போட்டியாக இருக்கும் மாவை சேனாதிராசாவை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்தவே, மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை கொழும்பில் இருந்து இறக்குமதி செய்தார்.
விக்னேஸ்வரன் கடந்தகாலங்களில் புலிகளுக்கு எதிரான பல தீர்ப்புகளை வழங்கியிருந்தவர். சுமந்திரனோடும் மிக நெருக்கமானவர். அதனால் தன்னைப் போலவே புலிகளுக்கு எதிரானவராக, தன் தாளத்துக்கு அவரை ஆட வைக்கலாம், மாவையை ஓடவைக்கலாம் என்றே சுமந்திரன் விக்னேஸ்வரனைச் சம்பந்தரிடம் சிபார்சு செய்திருந்தார்.மாவையை நேரடியாகத் தான் குத்தாமல், விக்னேஸ்வரன் என்ற அம்பு மூலம் அடிக்கலாமென்பதே சுமந்திரனின் திட்டம்.
எல்லாம் சரியாகத் தான் முதலில் நடந்தது.சுமந்திரன் எதிர்பார்த்ததைப் போலவே, முதலமைச்சராகத் தெரிவானவுடன் விக்னேஸ்வரன், மஹிந்தவின் முன்னிலையில் தான் பதவிப்பிரமாணம் செய்தார். நினைத்ததெல்லாம் நடக்கிறதே என்று சுமந்திரன் மகிழ்ந்தபோதுதான், விக்னேஸ்வரன் திடீரென சுமந்திரன் சற்றும் எதிர்பாரா வகையில் திடீர்த் தமிழ்த் தேசியவாதியாக விஸ்வரூபமெடுத்தார். கஜேந்திரகுமாரைவிடவும் அதிதீவிர தமிழ்த் தேசியவாதியாக மாறிய விக்னேஸ்வரன், தான் கண் வைத்திருந்த தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியாக வந்துவிடுவார் என்று சுமந்திரனுக்கு கலக்கமெடுத்தது. ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுவதா? விக்னேஸ்வரனை வீழ்த்த தன் சீடப்பிள்ளைகளைக் களத்தில் இறக்கினார்.
அஸ்மின், ஆர்னோல்ட், சயந்தன் , சுகிர்தன் என்ற நான்குபேரும் தான் அந்த சீடப்பிள்ளைகள். இந்த நால்வரும் சுமந்திரன் எள் என்றால் எண்ணெயாக நிற்பவர்கள்.
அஸ்மின் தன்னைக் களமிறக்கிய கட்சிக்கே அல்வா கொடுத்தவர். பலரிடம் பணம் வாங்கி, ஏமாற்றி அது குறித்த முறைப்பாடுகள் எல்லாம் வெளியாகி சந்தி சிரித்தது. அட்தைவிடப் பெண்பித்து தலைக்கேறி அதுபற்றி குற்றச்சாட்டுகளால் தன் சொந்த ஊருக்கே போகமுடியாமல் திண்டாடியவர்.
ஆர்னோல்ட், எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டுக் சீற் கிடைக்காததால், மாகாண சபைக்கு வந்தவர். மாகாணசபை உறுப்பினராக இருந்து மக்கள் சேவை செய்ததை விடவும் தனது இன்சூரன்ஸ் கொம்பனிப் பார்ட்டிகளில் கூத்தாடுவதே அவரது தொழிலாக இருந்தது. திலீபனின் நினைவேந்தலைக் குழப்பும் வகையில் நல்லூர் வீதியில் தனது கொம்பனிக் கொண்டாட்டத்தை நடத்தியவர். ஆனால் ‘பொங்குதமிழ் செய்தவன்’ என்று வாக்குக்காகச் சொல்லித் திரிந்தவர்.
சயந்தனைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவரது லீலைகளை உலகமே அறியும். கண்ணில் படும் பெண்களுடன் இரவுநேரத்தில் ‘ஓப்பினாக பேசுவதே’ அவரது ஓயாத வேலை. அதனாலேயே விவாகரத்தும் பெற்றவர். அவர் நிலத்தில் நிற்பதை விட ‘தண்ணியில்’ நிற்பதே அதிகம். மது, மாது என இரட்டைக்குதிரைகளில் சவாரி செய்வதற்காகவே பிறந்தவர்.
சுகிர்தனுக்கு இந்தக் கெட்டபழக்கங்கள் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு புதிது.பணபலமும் குறைவு. மக்கள் பலமும் குறைவு. மாகாணசபையில் கூட்டமைப்பின் பக்கம் அடித்த அதிர்ஷ்டக்காற்றில் மாகாணசபை உறுப்பினரானவர்.எனவே அரசியலில் காலுன்ற அவருக்கு ஒரு எம்.பி.யின் தயவு தேவைப்பட்டது. சுமந்திரனுக்கும் பின்கதவால் வந்தவர் என்ற விம்பத்தை உடைத்து வாக்குகள் ஊடாக எம்.பியாவதற்கு வடமராட்சியில் தன் செல்வாக்கை அதிகரிக்கவேண்டியிருந்தது. அதனால் சுகிர்தனும், சுமந்திரனும் ஈருடல் ஓருயிர் ஆயினர்.
இப்படி சமூகத்தில் செல்வாக்கிழந்தவர்கள், சீரழிவு வேலைகளில் ஈடுபட்டவர்கள், தன் தயவு தேவைப்படுபவர்களையே சுமந்திரன் தன்னுடைய ஆட்களாக மூளைச்சலைவை செய்வார்..ஏனென்றால் அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. அதனால் எப்படியாவது சுமந்திரனோடு இருந்து, அவருக்குச் சேவகம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியலில் இருக்கமுடியும். சயந்தன் தொடக்கம் பிரகாஷ் வரை இப்படியான ஒரு குற்றப்பரம்பரையைத்தான் சுமந்திரன் தன் தொண்டர்களாக வைத்திருந்தார், இப்போதும் வைத்திருக்கிறார்.
இப்படி சுமந்திரனின் ஏவுதலால் விக்னேஸ்வரனை விழுத்தப் புறப்பட்ட குற்றப்பரம்பரைக்குழு, யாழ்ப்பாணத்தில் உள்ள யூ.எஸ் ஹொட்டலில் அறை எடுத்து தங்கி, குடித்துக் கும்மாளமிட்டு விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர முற்பட்டது.
(சுத்துமாத்துகள் தொடரும்)